2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கணவனை இராணுவம் கூட்டிச் செல்லும் புகைப்படம் உள்ளது

Niroshini   / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

“சரணடைந்த எனது கணவரை, ஆடைகளைக் களைந்து இராணுவத்தினர் அழைத்துச் செல்கின்ற மற்றும் கிடங்கு ஒன்றின் அருகில் உட்கார வைத்துள்ள புகைப்படங்கள் சனல் - 4 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது” என இராணுவத்தில் சரணடைந்து காணாமற்போன கண்ணன் என்று அழைக்கப்படும் ஞானச்செல்லம் உதயராசா (காணாமற்போகும் போது வயது 40) என்பவரின் மனைவி அருந்தவச் செல்வி சாட்சியமளித்தார்.

காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை (26) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி பெண் இவ்வாறு சாட்சியமளித்தார்.

அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில்,

விடுதலைப் புலிகள் அமைப்பில் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினராகவிருந்த எனது கணவர் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இராணுவத்தில் சரணடைந்தார். நானும் எனது இரண்டு பிள்ளைகளும் அதனை நேரில் கண்டோம்.

அதன் பின்னர் கணவர் பற்றிய தகவல் இல்லை. இந்நிலையில், சனல் - 4 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட போர்க்குற்ற ஆதார புகைப்படம் எனக்கு கிடைத்தது. அதில் எனது கணவர் ஆடைகள் களையப்பட்ட நிலையில் இராணுவத்தினர் அழைத்து வருவது மற்றும் கிடங்கு ஒன்றின் அருகில் உட்கார வைத்திருப்பது தொடர்பான புகைப்படங்கள் உள்ளது.

இராணுவத்தினர் எனது கணவரைப் பிடித்து வைத்திருந்து சித்திரவதை செய்திக்கான ஆதாரங்களாக இது உள்ளன. இராணுவத்தினரே கணவரை வைத்துள்ளனர். கணவரை மீட்டுத்தாருங்கள் என்றார்.

புகைப்படங்களை பார்த்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் எவ்வித பதிலும் கூறாமல் அமைதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X