2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கரைச்சிப் பிரதேச சபைக்கு புதிய செயலாளர்

George   / 2016 ஜனவரி 02 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

கிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச சபையின் புதிய செயலாளராக கணேசன் கம்சநாதன், நேற்று வெள்ளிக்கிழமை (01) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதுவரை காலமும் கரைச்சிப் பிரதேச சபை செயலாளராகவிருந்த சி.கிருஸ்ணகுமார், வடமாகாண உள்ளுராட்சி திணைக்களத்தின் தலைமைப் பணிமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புதிய செயலாளராக பொறுப்பேற்றுள்ள க.கம்சநாதன் வடமாகாண பொது நிர்வாக அமைச்சில் பொதுமுகாமைத்துவ எழுதுநராக கடமயாற்றியதுடன், இவ் உத்தியோகத்தர்களின் வடக்கு கிழக்கு இணைந்த தொழிற்சங்கங்களுக்கு செயலாளராகவும் இருந்து வருகின்றார்.

அண்மையில் நடைபெற்ற பொது முகாமைத்துவ எழுதுநர் சேவையின் அதிசிறப்புத் தர ( சுப்றா) பரீட்சையில் சித்தியடைந்து இந்த நியமனத்தைப் பெற்றுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X