2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

கறுப்பு கண்ணாடி தலைக்கவசம் அணியும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை

George   / 2015 ஓகஸ்ட் 29 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முகத்தை மறைக்கும் வகையில் கறுப்பு கண்ணாடி பொருத்திய தலைக்கவசம் அணியும் சாரதிகளுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் சாரதியனுமதிப்பத்திரங்களும் இடைநிறுத்தி வைக்கப்படும் எனவும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன், வெள்ளிக்கிழமை (28) தெரிவித்தார்.

கிளிநொச்சி ஏ-9 வீதியில் முகத்தை மறைக்கும் வகையில் கறுப்பு கண்ணாடி பொருத்திய தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் செலுத்திய 5 சாரதிகளுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்த கிளிநொச்சிப் பொலிஸார் குறித்த ஐந்து பேரையும் வெள்ளிக்கிழமை (28) நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

அப்போது,  குறித்த சாரதிகள் எச்சரிக்கை  செய்யப்பட்டு விடுவிக்கப்;பட்டதுடன் எதிர்காலத்தில் இவ்வாறான குற்றத்;துடன் தொடர்புபட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படுவதுடன் சாரதியனுமதிப்பத்திரமும் இடை நிறுத்தி வைக்கப்;;;படும் என நீதவான் தெரிவித்தார்.

முகத்;தை மறைக்கும் வகையில் தலைக்கவசம் அணிந்து செல்லும் நபர்களால் பல்வேறு குற்றச்செயல்கள் மேற்;கொள்ளப்படுவதாக பொலிஸாரால் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, இவ்வாறான முகத்தை மறைக்கும் தலைக்கவசம் அணியும் சாரதிகளின் சாரதி அனுமதிப்பத்திரங்கள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுவதுடன் மிக கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் எனவும் நீதவான் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .