2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கொக்கிளாய் களப்பு பகுதியை பாதுகாப்பது தொடர்பான கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், பதுர்தீன் சியானா

முல்லைத்தீவு மாவட்டத்தையும் திருகோணமலையையும் பிரிக்கும் கொக்கிளாய் களப்புப் பகுதியில் நடைபெறும் சட்டவிரோதச் செயற்;பாடுகளை நிறுத்தி களப்பை பாதுகாப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்ட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

புல்மோட்டை மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த 15 க்கும் மேற்பட்ட சங்க அங்கத்தவர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், மீன்பிடியின்போது தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில்  கலந்துரையாடினர்.

மேலும், இந்தக் கூட்டத்தில் மீனவர்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டன.  

எதிர்வரும் 06 மாத காலப்பகுதிக்குள் புதியதொரு மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூட்டு வலை உள்ளிட்ட எந்தவொரு சட்டவிரோத செயற்பாடுகளும்; அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் மீனவத் திணைக்களப் பணிப்பாளர் எம்.சீ.எல்.பெர்னாண்டோ தெரிவித்தார்.

எதிர்வரும் மே மாதம் 25ஆம் திகதிக்கு முன்னர் மீன்பிடிச் சங்கங்களை பதிவுசெய்து கொள்ளுமாறும்; அவ்வாறு பதிவு செய்யாதவர்களுக்கு களப்பு பகுதியில் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படும். பாவிக்கும் அனைத்து மீன்பிடி இயந்திரங்களுக்கும் இலக்கங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பதிவு செய்யப்பட்ட நபர்களுக்கு மீன்பிடிப்பதற்கான அடையாள அட்டை வழங்குவதாகவும் 06 மாதங்களுக்குப் பின்னர் 1996ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட சட்டவிதி முறைகளுக்கமைய சட்டத்தை நடைமுறைப்படுத்தி பொறி ஏற்றி மீன் பிடிப்பதை முற்றாகத் தடை செய்வதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X