2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கிடுகுகள் வழங்கப்பட்டன

Princiya Dixci   / 2017 ஜனவரி 31 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட வவுனியா, முருகனூரைச் சேர்ந்த குடும்பமொன்றுக்கு, புலம்பெயர்ந்த உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின் கீழ், ஒரு தொகுதி கிடுகுகள் திங்கட்கிழமை வழங்கப்பட்டன.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களுள் ஒருவரும் வவுனியா மாவட்ட அமைப்பாளருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்), கட்சியின் தேசிய அமைப்பாளர் த.யோகராஜா, கட்சியின் செயற்குழு உறுப்பினர் சு.காண்டீபன் அகியோர் இதனைக் கையளித்தனர்.

குறித்த வீட்டின் கூரைகள், மிகவும் பழுதடைந்த நிலையிலும் தற்போது பெய்துவரும் மழை காரணமாகவும், குறித்த குடும்பத்தினர் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்த நிலையிலேயே, மேற்படி உதவி வழங்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .