2025 ஜூலை 14, திங்கட்கிழமை

குடி நீர்த் திட்டம் ஆரம்பித்து வைப்பு

Niroshini   / 2017 மார்ச் 06 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் உயிலங்குளம் பொலிஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் திட்டம், இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொற்றிகோ தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் மற்றும் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் பலிகக்கார ஆகியோர் இணைந்து வைபவ ரீதியாக குறித்த திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.

ஜனாதிபதி செயலனி சிறுநீரக நோய் தடுப்பு பிரிவின் ஏற்பாட்டில் இலங்கை கடற்படையின் உதவியுடன் குறித்த திட்டம் மன்னார் - உயிலங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை அப்பிரதேசத்து மக்கள் இலவசமாக பெற்று அருந்துவதன் மூலம் சிறுநீரக நோயில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில், மன்னார் மாவட்டத்தில் நீச்சல் பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றுதல் மற்றும் அடையாள அட்டை போன்றன வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் சர்வ மதத்தலைவர்கள், கிராம மட்டத்தலைவர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், ஜனாதிபதி செயலணி சிறுநீரக நோய்தடுப்பு பிரிவின் வன்னி மாவட்ட இணைப்பாளர் சமிந்த பிரித்திவிராஜ் வாசன ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .