Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Sudharshini / 2015 டிசெம்பர் 19 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
முள்ளிக்குளம் மக்கள், முள்ளிக்குளத்தை அண்மித்த மலைக்காடு பகுதியில் தற்காலிகமாக வாழ்ந்து வரும் நிலையில், தமது பூர்வீகக் கிராமமாகிய முள்ளிக்குளத்தை கடற்படையினர் ஆக்கிரமித்து இருப்பதாகவும் அதை நல்லாட்சி அரசதங்கம் தம்மிடம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இது குறித்து மன்னார் மாவட்ட செயலகத்தின்;; செயலாளர் எம்.வை.எஸ்.தேசபிரியவிடம் மகஜர் ஒன்றினை வெள்ளிக்கிழமை(18) கிராம மக்கள் சார்பாக மன்னார் மாவட்ட இணைப்பாளர் கையளித்துள்ளார்.
மன்னார் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அலுவலகத்தில், மன்னார் மாவட்ட இணைப்பாளர் ஏ.பெனடிற் குரூஸ் தலைமையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பை அடுத்து, மன்னார் மாவட்ட செயலகத்துக்குச் சென்று குறித்த மகஜரை கையளித்தார்.
இதன்போது முள்ளிக்குளம் கிராம பங்குதந்தை எஸ்.ஏ.தவராஜா மற்றும் அக்கிராமத்தின் அபிவிருத்தி குழு சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது,
குறிப்பாக முள்ளிக்குளம் கிராமத்தில் மன்னார் ஆயர் அவர்களின் 53 ஏக்கர் காணி உட்பட சுமார் 1,250 ஏக்கர் பூர்வீக குடியிருப்பாளர்களின் காணிகள் அரச படைகளால் ஆக்கிரமிக்கபட்டுள்ளது என மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
300 வருடங்கள் பழமை வாய்ந்த முள்ளிக்குளம் கிராமத்தில் இருந்த மக்கள் நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு, 350ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்தனர்.
மீண்டும் 2007ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி யுத்தமற்ற சூழ்நிலையில், அரச படைகளினால் முள்ளிக்குளம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றபட்டதுடன் எவ்வித உடமைகளையும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
ஆனால், இந்த நல்லாட்சி ஏற்பட்டுள்ள காலகட்டத்திலும் எமது உறவுகள் வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் அகதிகள் என்கின்ற முத்திரையுடனேயே வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் முள்ளிக்குளம் கிராமத்திற்கு அயல் கிராமமாகிய மலைக்காடு என்னும் பகுதியில் தற்காலிகமாக அடிப்படை வசதிகள் இன்றி தற்பொழுது வாழ்ந்து வருகின்N;றாம்.
ஆனால், குறித்த எமது பூர்வீக கிராமத்திற்கு செல்வதற்கு பல்வேறு வழிகளில் முயற்சி எடுத்தாலும் கடற்படையினர் அதற்கு இடையூறாக செயற்படுவதுடன், எமது மக்களின் பூர்வீக நிலங்களில் இருந்து 500 ஏக்கர் காணியை விடுவிப்பதாக கூறியிருந்தனர்.
ஆகவே, எமது பூர்வீக காணிகள் முற்றுமுழுவதமாக எமக்கு வழங்கபடவேண்டும் என்பதேயாகும். எனவே, எமது பூர்வீக காணியில் சுதந்திரமாக வாழ ஏற்ற ஏற்பாடுகளை செய்து தருமாறு கோருகின்றோம் என அம்மகஜரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .