Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 மே 04 , மு.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.தபேந்திரன்
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் ஏற்பாட்டில் கிராமங்கள் தோறும் அனர்த்த முகாமைத்துவ குழுக்கள் அமைக்கும் செயற்பாடு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்தின் வழிகாட்டலில் மாவட்டத்திலுள்ள கரைச்சி, கண்டாவளை, பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி (பளை) ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தம்பகாமம் கிராம அலுவலர் பிரிவுக்கான கிராமமட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக்களுக்கான முதலுதவிப் பயிற்சியின் ஆரம்பநாள் நிகழ்வு, நேற்று செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்றது.
இதில் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் க.சுகுணதாஸ் வளவாளராக கலந்துகொண்டு கருத்துக்களை வழங்கினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .