2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கிராமத்திற்கு பஸ் சேவை வேண்டும்

George   / 2017 மார்ச் 05 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, பூநகரி, பள்ளிக்குடா கிராமத்துக்கு பஸ் சேவையினை மாணவர்களின் நலன்கருதி நடாத்துமாறு அப்பகுதி பெற்றோர்களினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகரில் இருந்து பூநகரி வாடியடி வரை நடைபெறும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ், பள்ளிக்குடா கிராமத்துக்கு  வந்து, பள்ளிக்குடாவில் இருந்து செம்மங்குன்று சென்று திரும்புவதன் மூலம், பூநகரி மத்திய கல்லூரிக்குச் சென்று வரும் மாணவர்கள் பெரும் நன்மை அடைவார்கள்.

பள்ளிக்குடா, நெடுங்குளம், மணற்காடு, நித்தியதரைவெளி, சேவியர்தோட்டம் ஆகிய கிராமங்களின் 500 க்கு மேற்பட்ட குடும்பங்கள் பூநகரி வாடியடிச் சந்திக்கு வருகை தருவதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், பஸ் சேவையினை நடாத்துவதன் மூலம் பூநகரி மத்திய கல்லூரி, பூநகரிப் பிரதேச செயலகம், பூநகரி மருத்துவமனை ஆகியவற்றிற்குச் செல்லும் மாணவர்களும் மக்களும் பெரும் நன்மை அடைவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .