2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கிளிநொச்சி மாவட்டத்தில் 18,375 குடும்பங்களுக்கு வீடுகள் வேண்டும்

Menaka Mookandi   / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ள 17,886 குடும்பங்களுக்கும் மீள்குடியேற்றப்படவேண்டிய 489 குடும்பங்களுக்கும் வீடுகள் அமைத்துக் கொடுக்கவேண்டிய தேவையுள்ளதாக மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 1983ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்த 42,736 குடும்பங்களில் தற்போது 41,862 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன.

இதேவேளை, இதுவரை மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்படாத பகுதிகளில் மீள்குடியேறுவதற்கு 748 குடும்பங்கள் தமது பதிவுகளை மேற்கொண்டுள்ளன.

இந்நிலையில் கடந்த 2010ஆம் ஆண்;டு முதல் இன்றுவரை பல்வேறு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதியுதவிகளுடன் நிரந்தர வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இருந்த போதும் மீள்குடியேறியுள்ள குடும்பங்களில் 17,886 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் அமைத்துக்கொடுக்க வேண்டிய தேவையுள்ளது.

அத்துடன் மீள்குடியமர்விற்கான தமது பதிவுகளை மேற்கொண்டுள்ள 748 குடும்பங்களில் 498 குடும்பங்களுக்கும் வீடுகள் அமைத்துக் கொடுக்கவேண்டியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X