2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

கிளிநொச்சியில் தமிழரசு கட்சியின் மே தினம்

George   / 2017 மே 01 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

காணாமல் ஆக்கப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரிக்கை விடுத்து, கிளிநொச்சியில் தமிழரசு கட்சியின் மே தினம் ஊர்வலம் நடத்தப்பட்டது.

காலை 9 மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றில் ஆரம்பிக்கப்பட்ட மே தின ஊர்வலம், டிப்போச் சந்தியை சென்றடைந்தது. அங்கு பொதுக் கூட்டமும் இடம்பெற்றது.

தழிழரசு கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊர்வலத்தின்  காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அரசில் கைதிகளை சித்தரிக்கும் வகையில் ஊர்திகளும் காணப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, சிவஞானம் சிறிதரன், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, மாகாண சபை உறுப்பினர் பசுபதிபிள்ளை உள்ளிட்டவர்களும் நூற்றுக்கணக்கான காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .