2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சந்தையிலிருந்து நீர் இறைக்கும் மோட்டார் திருட்டு

George   / 2016 மே 03 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன்

நெல்லியடி சந்தையின் தேவைக்காக பொருத்தப்பட்டிருந்த நீர் இறைக்கும் மோட்டார், இனந்தெரியாத நபர்களால் கடந்த 30ஆம் திகதிக்கும் 2ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதிக்குள் களவாடப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

30ஆம் திகதி சந்தையை மூடிவிட்டு, 2ஆம் திகதி மீண்டும் திறந்த வேளையில் மோட்;டார் திருட்டு போயுள்ளது தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் நெல்லியடி வர்த்தக சங்கச் செயலாளர் இ.சிறிரஞ்சனுக்கு வர்த்தகர்களால் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. வர்த்தக சங்கத்தினூடாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது.

நீர் இறைக்கும் இயந்திரம் திருட்டுப் போனமையால் சந்தையின் நீர்த் தேவைக்காக இரண்டு நாட்;களாக வர்த்தகர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X