க. அகரன் / 2018 ஏப்ரல் 16 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபையை சுதந்திரக்கட்சி கைப்பற்றியுள்ளது.
வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபையின் தவிசாளர் உப தவிசாளர் தெரிவு இன்று (16) வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது.
வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபை தவிசாளர் பதவிக்காக, இதன்போது, சுதந்திர கட்சியை சேர்ந்த ஆசிர்வாதம் அந்தோணி, தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சு.ஜெகதீஸ்வரன், தமிழர் விடுதலை கூட்டணியின் யேசுதாஸ் டெல்சன் ஆகியோரின் பெயர்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், கூடிய வாக்குகளைப் பெற்று ஆசிர்வாதம் அந்தோணி தவிசாளராக தெரிவு செய்யபட்டார்.
இதேவேளை, உப தலைவருக்கான போட்டியில் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த நவரட்ணம் சிவாயினி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சி,அருள்கரனும் போட்டி இட்டனர்.
இதில் சிவாயினிக்கு 7 வாக்குகளும் அருள்கரனுக்கு 6 வாக்குகளும் கிடைத்த நிலையில் ந.சிவாயினி உபதலைவராக தெரிவு செய்யபட்டார் .
8 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago