Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2016 மே 11 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, புளியம்பொக்கனை பகுதியில் கால்வாய்க்கு அருகிலிருந்து கடந்த 8ஆம் திகதி மீட்கப்பட்ட சிசுவின் சடலம், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்து இன்று புதன்கிழமை (11) பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சதுரங்க முன்னிலையில் வவுனியாவிலிருந்து வருகை தந்த சட்டவைத்தியதிகாரி, இந்த பிரேத பரிசோதனையை மேற்கொண்டார். பிரேத பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
பிறந்து ஒரிரு நாட்களான இந்த சிசுவின் சடலம், கால்வாயில் வீசப்பட்டிருப்பதாக மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் அங்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர். அங்கு சென்ற கிளிநொச்சி நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா, சிசுவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பணித்திருந்தார்.
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சட்டவைத்தியதிகாரி இல்லாத காரணத்தால், உடனடியாக பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
27 minute ago
1 hours ago
1 hours ago