Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Kanagaraj / 2017 மார்ச் 04 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் பெண்ணொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் பொலிசாரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொசான் ராஜபக்ச தெரிவித்தார்.
இன்று (04) சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்ற அவர், அங்கு கூடியிருந்த மக்களுடனான சந்திப்பில் மேற்கொண்டவாறு தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் அடிக்கடி எம்முடன் தொடர்பு கொள்கின்றார். அவர் இப்பகுதியில் அதிக காலம் பணிபுரிந்தபர். அவர் இப்பிரச்சினை தொடர்பில் நடுநிலை விசாரணை மேற்கொள்ளுமாறு கூறியுள்ளார்.
எனவே, பொலிசாரால் மேற்கொள்ளப்புடும் எந்தவொரு விசாரணைக்கும் ஒத்துளைப்பு வழங்குங்கள். சட்டத்தினை கையில் எடுப்பதற்கு யாருக்கும் முடியாது. எனவே, எமது விசாரணை நடு நிலையாக காணப்புடும். யாரும் பயப்பட வேண்டியதில்லை. பாதிக்கப்பட்டவருக்கு நீதி பெற்று கொடுப்போம். உண்மையான குற்றவாளி யார் என்பதை கண்டறிந்து நீதியின் முன்னிறுத்துவோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago