2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சுயதொழில் ஓய்வூதியத்திட்டத்தில் 2,800 பேர் இணைப்பு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 08 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையின் சுயதொழில் ஓய்வூதியத் திட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரையில் 2,800 பேர் இணைந்துள்ளதாக அச்சபையின் வடமாகாண பிரதிப் பணிப்பாளர் பாக்கியராசா பிரதீபன் தெரிவித்தார்.

பூநகரி பிரதேச செயலகப் பிரிவில் 2,070 பேர் இணைக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இப்பிரதேச செயலகப் பிரிவு 2015ஆம் ஆண்டில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அதற்கான கௌரவிப்பு மிக விரைவில் நடைபெறவுள்ளதாகவும்  அவர் கூறினார்.  

பளை பிரதேச செயலகப் பிரிவில் 441 பேரையும் கரைச்சி பிரதேச செயலகப் பிரிவில் 169 பேரையும் கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவில் 120 பேரையும் இணைத்துள்ளது.

2014ஆம் ஆண்டில் இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் செயற்றிட்டங்கள் இம்மாவட்டத்தில் ஆரம்பித்தபோதும் மிக துரிதமாக பல பயனாளிகளை தற்போது இணைக்க முடிந்ததாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X