Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Gavitha / 2016 ஏப்ரல் 24 , மு.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் உதயபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவியை, துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞனை, எதிர்வரும் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மன்னார் நீதவான் சனிக்கிழமை (23) உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள உதயபுரம் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது பாடசாலை மாணவி, பேசாலை கிராமத்தில் தரம் ஐந்துக்கான மாலை நேர வகுப்புக்கு கடந்த வெள்ளிக்கிழமை (22) சென்றுள்ளார். எனினும் ஆசிரியர் அங்கு இருக்கவில்லை என்பதால் மாலை நேர வகுப்பு இரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், வகுப்புக்குச் சென்ற சிறுமியை அங்கிருந்த பாழடைந்த வீடொன்றுக்கு அழைத்துச் சென்ற 21 வயதுடைய இளைஞன், குறித்த சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சி செய்துள்ளார்.
எனினும் இளைஞனிடமிருந்து எப்படியோ தப்பிச் சென்ற மாணவி, பேசாலை பகுதியிலுள்ள சிலருக்கு இது குறித்து தெரியப்படுத்தியுள்ளார். பின்னர், மாணவியின் பெற்றோரினூடாக பேசாலை பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டதையடுத்து, குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.
மேலும் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞனுக்கு எதிராக, பொலிஸார் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் இந்தச் சம்பவத்தை கண்டித்தும் உதயபுரம் கிராம மக்கள் சனிக்கிழமை (23) காலை 5 மணிமுதல் 6.30 மணிவரை, மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி வாங்காலைபாடு சந்தியை மறித்து ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னnடுத்திருந்தனர்.
சந்தேக நபர், சனிக்கிழமையன்று மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் தீர்ப்பளித்திருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
25 minute ago
48 minute ago
2 hours ago