2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சிறிய, நடுத்தரக் குளங்களின் கீழ் 6,071 ஏக்கரில் நெற்செய்கை

George   / 2016 மே 03 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

'கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடுக்குளம் தவிர்ந்து ஏனைய சிறிய மற்றும் நடுத்தரக் குளங்களின் கீழ், 6,071 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது' என மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரணைமடுக் குளத்தின் புனரமைப்பு பணிகள்; தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இக்;;குளத்தின் கீழான சிறுபோக நெற்செய்கை முழுமையாக நிறுத்தப்பட்டு, குளக்கட்டு, நீர் விநியோக வாய்க்கால்;கள் மற்றும் கழிவு வாய்க்கால்கள் ஆகியன புனரமைக்கப்பட்டு வருகின்;றது.

இவ்வாறு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதனால் இதன் கீழான சுமார் 8,000 ஏக்கர் வரையான சிறுபோக நெற்செய்கை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், ஏனைய குளங்களின் கீழ் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.

நடுத்தரக் குளங்களான கல்மடுக்குளத்தின் கீழ், 1,350 ஏக்கரிலும், அக்கராயன் குளத்தின் கீழ், 2,790 ஏக்கரிலும், புதுமுறிப்;புக் குளத்தின் கீழ் 835 ஏக்கரிலும், கரியாலை நாகபடுவான் குளத்தின் கீழ் 500 ஏக்கரிலும், வன்னேரிக் குளத்தின் கீழ் 121 ஏக்கரிலும், சின்ன பல்லவராயன்கட்டு குளத்தின் கீழ் 350 ஏக்கரிலும் சிறிய குளங்;களான கனகபுரக்குளம் கந்தன்குளம், புதுஐயன்குளம், ஆனைவிழுந்தான் குளம், பாலங்குளம் குஞ்சுக்குளம் உள்ளிட்ட குளங்;களின் கீழ் 125 ஏக்கரிலும் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X