Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Thipaan / 2016 ஜனவரி 03 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், திடீர் மாரடைப்பு காரணமாக, ஸ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் செய்தியை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் உறுதிப்படுத்தியுள்ளார்.
'நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பின் காரணமாக, உடனடியாக அவர் ஸ்ரீ ஜெயவர்த்தன புர வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதனின் உடல் நிலை தேறி வருவதாகவும், அவருக்கு தொடர்ச்சியாக அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் வைத்து சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என ஸ்ரீ ஜெயவர்த்தன புர வைத்தியசாலை வைத்தியர்கள் தொரிவித்துள்ளனர்' எனவும் எஸ்.வினோ நோகராதலிங்கம் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
20 minute ago
43 minute ago
2 hours ago