2025 ஜூன் 30, திங்கட்கிழமை

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இரத்ததானம்

George   / 2016 ஏப்ரல் 22 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ லங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இரத்ததான நிகழ்வு இன்று இடம்பெற்றது.

தலைவர் டபிள்யூ.ஏ.டி.விமலரத்னவின் ஆலோசனைக்கு அமைவாக, மன்னார் மாவட்ட ஸ்ரீலங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் எஸ்.எச்.எம்.இல்ஹாம் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இரத்ததான நிகழ்வில் ஸ்ரீலங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் மன்னார் பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற அங்கத்தவர்கள் இரத்ததானம் செய்தனர்.

குறித்த நிகழ்வில், மன்னார் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி பீரிஸ் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X