2025 ஜூன் 30, திங்கட்கிழமை

நகைக்கடையில் திருடர்கள் கைவரிசை

George   / 2016 ஜனவரி 16 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு, விசுவமடுப் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்று உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார், இன்று சனிக்கிழமை தெரிவித்தனர்.

நேற்று வெள்ளிக்கிழமை  இரவு இந்த திருட்டுச்  சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

குறித்த நகைக் கடையின்  மூன்று கதவுகளை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள அங்கிருந்து 22 பவுண் தங்க  நகைகள்  மற்றும்  பணம் என்பவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

மேலும்,  பணப் பாதுகாப்புப் பெட்டியையும் திருடர்கள் உடைப்பதற்கு முயற்சித்திருப்பதாகவும், அவை கடுமையான சேதமடைந்துள்ளதனால் அதனை  திறக்க  முடியாதிருப்பதாகவும் பொலிஸார குறிப்பிட்டுள்ளனர்.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X