Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Niroshini / 2016 ஜனவரி 21 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஸ்டஈடுகளை வழங்கும் முகமாக, புனர்வாழ்வு அதிகார சபையால், வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று நடமாடும் சேவை ஒன்று இடம்பெற்றது.
யுத்தத்தில் உயிரிழப்புக்களை எதிர்நோக்கிய குடும்பங்கள், அபயங்களை இழந்தோர், வீடுகள், சொத்தழிவு, வழிபாட்டுத் தலங்களின் அழிவு என்பவற்றுக்கான நஸ்டஈடுகளை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களில் 500 பேருக்குரிய ஆவணங்களை கோவைப்படுத்தும் முகமாக இந்த நடமாடும் சேவை நடைபெற்றது.
இவர்களுக்கான நஸ்டஈடு எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நடமாடும் சேவையில், புனர்வாழ்வு அதிகார சபையின் செயற்பாட்டு பணிப்பாளர் எஸ்.புகேந்திரன், பிரதிப் பணிப்பாளர் எஸ்.எம்.பார்ஹதீன், பிரதி பணிப்பாளர் ஹூசைன், புனர்வாழ்வு அதிகார சபையின் வடமாகாண பொறுப்பதிகாரி எஸ்.பி.செல்வராஜா மற்றும் பலர் கலந்து கொண்டு மக்களுக்கு சேவைகளைப் பெற்றுக் கொடுத்தனர்.
இதேவேளை, நாளை மன்னாரில் நடைபெறவுள்ள புனர்வாழ்வு அதிகார சபையின் நடமாடும் சேவைக்கு, 200 பேருக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
45 minute ago
1 hours ago