2025 ஜூன் 30, திங்கட்கிழமை

நல்லாட்சி அரசாங்கத்தில் எனது மகன் கிடைப்பார்

Niroshini   / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

'காணாமல் போன எனது மகன் கிடைப்பார் என கடந்த கால ஆட்சியாளர்கள் என்னை ஏமாற்றினர். ஆனால், தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் எனது மகன் கிடைப்பார் என நம்புகின்றேன்' என  காணாமல்போன கிளிநொச்சி, உதயநகரைச் சேர்ந்த பத்மநாதன் சுலக்ஸன் (காணாமற்போகும் போது வயது 17) என்பவரின் தாயார் சாட்சியமளித்தார்.

காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கிளிநொச்சி மாவட்டத்துக்கான அமர்வு, இன்று திங்கட்கிழமை (25) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு சாட்சியமளித்தார்.

'க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுக்காக காத்திருந்த எனது மகனை, 2008ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் பிடித்துச் சென்றனர். இருந்தும், மீண்டும் எமது மகன் எங்களுடன் வந்து சேர்ந்தார்.

இந்நிலையில், 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி புலிகள் மீண்டும் எமது மகனைப் பிடித்துச் சென்றனர். இறுதி யுத்தத்தில் 4 நாட்கள் வட்டுவாகலில் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்த நாங்கள் ஆனந்தகுமாரசுவாமி முகாமுக்கு மாற்றப்பட்டோம்' என்றார்.

'எமது மகன் 2009ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றதைக் கண்டதாக உறவினர் ஒருவர் எனக்கு கூறினார். ஆனால் எமது மகன் இதுவரையில் கிடைக்கவில்லை.

உங்கள் மகன் இருக்கின்றார், அவரை மீட்டுத்தருவோம் என கடந்த கால ஆட்சியாளர்கள்  வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றியுள்ளனர்' எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X