Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
George / 2016 ஜனவரி 08 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சியின் ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு, முல்லைத்தீவு மாவட்டத்தின் ஹிஜ்ராபுரம் ஜூம்ஆப்பள்ளியில் இன்று வெள்ளிக்கிழமை விஷேட தொழுகை இடம்பெற்றது.
இந்த நிகழ்வில், வடமாகாண சபை உறுப்பினர் யாசின் ஜவாஹிர் மற்றும் ஹிஜ்ராபுரம், நீராவிப்பிட்டி, தண்ணீரூற்று ஜூம்ஆப்பள்ளி நிர்வாகத்தினர், உலமாக்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது விஷேட உரை இடம்பெற்றதுடன், சிலாபத்தைச் சேர்ந்த மௌலவி முஹம்மது ஹசன் (நூரி), விஷேட பிரார்த்தனை செய்தார்.
அத்துடன், மாகாண சபை உறுப்பினர் யாசின் ஜவாஹிர் மற்றும் ஹிஜ்ராபுரம், நீராவிப்பிட்டி, தண்ணீரூற்று ஆகிய கிராம சேவகர்கள் இணைந்து குறித்த ஜூம்ஆப்பள்ளி வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நாட்டி வைத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
12 minute ago
35 minute ago
2 hours ago