Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
George / 2017 பெப்ரவரி 13 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
“14 நாட்களாக நில மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நாங்கள், பொறுமையின் எல்லையை கடந்துவிட்டோம். இனிவரும் நாட்களில் நாங்கள் எடுக்கின்ற விபரீதமான முடிவுகளுக்கும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களுக்கும் இந்த அரசாங்கமே முழுப் பொறுப்பினையும் ஏற்க வேண்டும்” என்று, முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
“போராட்டத்தின் வடிவத்தினை மாற்றி, எமது காணிகளுக்குள் செல்வதற்கான இறுதி முடிவுகளையும் எடுப்பதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம்” என்றும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கூறுகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாப்பிலவு, பிலவு பிரதேசம் விமானப் படையின் ஆக்கிரமிப்புக்குள் மிக நீண்ட காலமாக உள்ளது. ஆக்கிரமிப்புக்குள் உள்ள தமது பூர்வீக நிலங்களை விடுவித்து, தம்மை மீள்குடியேற்றுமாறு அப்பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகளை விடுத்திருந்ததுடன், கடந்த காலங்களில் அடையாளப் போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.
மக்களது கோரிக்கைகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த மாதம் 31 ஆம் திகதி, குறித்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தமது காணிகளை ஆக்கிரமித்து விமானப்படை முகாமுக்கு முன்னால் தொடர்ச்சியான போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர்.
பல்வேறு அமைப்புக்கள், பொதுமக்கள், அரசியல்வாதிகளுடைய ஆதரவுடன், இரவு பகலாக இந் நில மீட்புப் போராட்டம் கடந்த 14 நாட்களாக நடைபெற்று வருகின்றது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு வழங்கிவருபவர்கள் அவர்களுக்கு உணவு, தண்ணீர் போன்ற அத்தியவசிய உதவிகளை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றனர். இருப்பினும், தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக, மக்கள் தமக்கு தேவையான உணவுகளை வீதியில் வைத்தே சமைத்து உண்டு வருகின்றனர்.
தொடர்ச்சியாக போராட்டத்தினை நடத்திய மக்கள் தமக்கான தீர்வு இதுவரை வழங்கப்படாததை அடுத்து, கடுமையான விசனத்தினை வெளியிட்டிருந்தனர். குறிப்பாக அரசாங்கம், படையினர் மற்றும் தமிழ் அரசியல் வாதிகள் தொடர்பிலும் கடுமையான விமர்சனங்களை வெளிப்படையாகவே தெரிவித்திருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
8 hours ago