2025 ஜூன் 30, திங்கட்கிழமை

நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மார்க் ஆனந்த்

நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பு ஒழுங்கு செய்த கவனயீர்ப்பு பேரணியும், ஆர்ப்பாட்டமும்   வியாழக்கிழமை(10) மன்னாரில் நடைபெற்றது.

மன்னார் குடும்ப பணியகத்துக்கு முன்னால் காலை 10.30 மணயிளவில்  ஆரம்பமான இவ் ஊர்வலம், மன்னார், தலைமன்னார் பிரதான வீதியூடாக சென்று மன்னார் மாவட்ட செயலகம் வரை சென்றது.

பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக  நல்லாட்சி அரசு என கூறப்படும் அரசாங்கம், நல்லிணக்க அடிப்படையில் இதுவரையில் எதனையும் செய்யாமை தொடர்;பாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

கவனயீர்ப்பு போராட்டத்தின்போது அரசியல் கைதிகளின் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு அவரவர் குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும், காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆக்கபூர்வமாக நடவடிக்கை எடுத்து அவர்களை கண்டுபிடித்து தரவேண்டும்.

பெண்கள், சிறுவர்களின் உரிமை மீறல்கள் தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும், மீனவர்களின் பிரச்சிணைகள் தீர்கப்படவேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

குறித்த போராட்டத்தில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர்; அருட்தந்தை இ.சேபமாலை, தமிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.சிவகரன், சமூக ஆர்வலர் மார்ட்டீன் டயஸ், முன்னாள் நகரசபையின் உறுப்பினர் ரெட்ணசிங்கம் குமரெஸ், வட மாகாண சபை உறுப்பினர் ஞானசீவன் குணசீலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X