2025 ஜூன் 30, திங்கட்கிழமை

பண்டிகைக்காகல குத்தகை மூலம் ரூ. 39 இலட்சம் வருமானம்

George   / 2015 டிசெம்பர் 12 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளுக்காக மன்னார் நகர சபையினால் குத்தகைக்கு விடப்பட்ட கடைத்தொகுதிகள் மூலம் இதுவரை மன்னார் நகர சபைக்கு சுமார் 39 இலட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக மன்னார் நகர சபையின் செயலாளர் பிரிட்டோ லெம்பேட் இன்று சனிக்கிழமை தெரிவித்தார்.

மன்னார் நகர சபையினரால் நத்தார் புதுவருட பண்டிகைக்கால சந்தை கடைத்தொகுதி வருடா வருடம் குத்தகைக்கு விடப்படுவது வழமை. இந்த நிலையில்  இம்முறையும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், கடந்த 8ஆம் திகதி காலை 7 மணிக்கு ஆரம்பமான கேள்விப்பத்திரங்கள் கோரால், மாலை 3 மணிவரை ஏற்றுக்கொள்ளப்பட்டு மாலை 3 மணியளவில் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை குத்தகைக்கான கடைத்தொகுதி அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

சுமார், 1,200 விண்ணப்பங்களில் கிடைக்கப்பெற்றிருந்த போதும்  189 கடைத்தொகுதிக்கான விண்ணப்பங்களே மூடிய கேள்வி கோரல் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஏற்கெனவே, மன்னார் மாவட்ட வியாபாரிகளுக்கு என ஒதுக்கப்பட்ட கடைகளின் எண்ணிக்கை 33 இருந்த போதும் வெளி மாவட்ட வியாபாரிகளின் கடைத்தொகுதிக்கும் விண்ணப்பிக்கும் சந்தர்ப்பம் மன்னார் மாவட்ட வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டது. 

பண்டிகைக்காலத்துக்கான வர்த்தக நிலையங்களை அமைக்க ஒதுக்கப்பட்ட இடங்களின் மூலம் இது வரை    39 இலட்சம் ரூபாய்  வருமானம் மன்னார் நகர சபைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதுடன் கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இரட்டிப்பு வருமானமாக உள்ளது.

இவ் வருமானத்தில் இருந்து  துப்பரவு தொழிலாளர்கள், சிற்றூழியர்கள், எரிபொருள் செலவு மற்றும் சிறு அபிவிருத்தி பணிகள் ஆகியவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது' என மன்னார் நகர சபையின் செயலாளர் பிரிட்டோ லெம்பேட் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X