2025 ஜூன் 30, திங்கட்கிழமை

பளையிலும் முகமாலையிலும் பாடசாலைக் கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டி வைப்பு

Princiya Dixci   / 2016 மே 06 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, பளை இந்து ஆரம்ப வித்தியாலயம் மற்றும் முகமாலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகிய இரண்டு பாடசாலைகளில் கட்டடங்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா, நேற்று வியாழக்கிழமை (05) நடைபெற்றது.

வடமாகாண கல்வியமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, வடமாகாண சபை உறுப்பினர் ப.அரியரட்ணம், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கந்தசாமி முருகவேல், பளைக்கோட்டக் கல்வியதிகாரி வை.குகானந்தராசா ஆகியோர் அடிக்கல்லை நாட்டினர்.

வடமாகாண கல்வியமைச்சின் நிதி ஒதுக்கீட்டில், பளை இந்து ஆரம்ப வித்தியாலயத்தில் 15 மில்லியன் ரூபாய் செலவிலும், முகமாலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 7.5 மில்லியன் ரூபாய் செலவிலும் வகுப்பறைக் கட்டடத் தொகுதிகள் அமைக்கப்படவுள்ளன.

2000ஆம் ஆண்டு இடம்பெற்ற போர் காரணமாக, முகமாலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை முற்றாக அழிவடைந்த நிலையில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

அதேவேளை, பளை மத்திய கல்லூரியிலிருந்து பிரிந்து உருவாக்கப்பட்ட பளை இந்து ஆரம்ப வித்தியாலயத்துக்கும் முதலாவது கட்டடம் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X