2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

புழுதியாறு குளத்தில் வெடிபொருட்கள் மீட்பு

Editorial   / 2017 ஒக்டோபர் 27 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.என்.நிபோஜன், நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி வட்டக்கச்சி புழுதியாறு குளத்தில் வெடிபொருட்கள் சில அதிரடிப்படையினரால்  நேற்று (26) இரவு  மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யுத்த காலத்தில் அனுராதபுரம் விமான நிலைய தாக்குதலுக்கு ஒத்திகை இடம்பெற்ற விமான ஓடுபாதைகள் அமைந்துள்ள இடத்தில் இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது 60 மில்லி மீற்றர் உடைய  10 மோட்டார் செல்கள், 81 மில்லி மீற்றர் உடைய 01 மோட்டார் செல் என்பன இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

இரணைமடு விமான படையினர் இராமநாதபுரம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் நீதிமன்ற அனுமதியுடன்,  விசேட அதிரடிப்படையினரால் இவை மீட்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .