2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பொது அமைப்புகள் கவனயீர்ப்பு போராட்டம்

George   / 2017 மார்ச் 04 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, கிளிநொச்சி நகர பொது அமைப்புகள்  ஒன்றிணைந்து, கவனயீர்ப்பு பேரணி ஒன்றை  இன்று முன்னெடுத்தனர்.

கிளிநொச்சி நகர் கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், சனசமூநிலையம், என்பன ஒன்றிணைந்து, கிளிநொச்சி நகர் சித்திவிநாயகர் ஆலய முன்றிலிருந்து பேரணியாக   மாவட்டச் செயலகம் வரை சென்று,  அங்கு ஜனாதிபதிக்கான மகஜரை  மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலினிடம் கையளித்தனர்.

தொடர்ந்து வடக்கு மாகாண முதலமைச்சர்  மற்றும் எதிர் கட்சி  தலைவர் ஆகியோருக்கான மகஜரை வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிபிள்ளையிடம் கையளித்தனர்.

தொடர்ந்து, மாவட்டச் செயலகத்திலிருந்து ஏ9 வீதி ஊடாக, காணாமல்  ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலுக்குச் சென்று அவர்களுக்குஆதரவாக போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு தீர்வு அரசியல் கைதிகளின் விரைவான விடுதலை போன்றவற்றை வலியுறுத்தியே, பொது அமைப்புகள் இந்த கவனயீரப்பு பேரணியை மேற்கொண்டிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .