2025 ஜூன் 25, புதன்கிழமை

பாதுகாப்பு கம்பியை புனரமைத்து தருமாறு கோரிக்கை

Gavitha   / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பிரதான பஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள பாலத்தின் பாதுகாப்பு கம்பியை புனரமைத்து தருமாறு பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

முல்லைத்தீவு வட்டுவாகல் ஊடாக பரந்தன் சந்தியை சென்றடையும் பிரதான வீதியில் உள்ள சிறிய பாலத்தின் பாதுகாப்பு கம்;பியே இவ்வாறு சேதமடைந்துள்ளதாகவும் பயணிகள் சுட்;டிக்காட்டுகின்றனர்.

பாதுகாப்பற்ற முறையில் குறித்த பாலம் காணப்படுவதால் இவ்வீதியூடாக போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், விபத்துக்கள் ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

இவ்வீதியில் அமைந்துள்ள குறித்த பாலத்தின் ஊடாக விபத்துக்கள் இடம்பெறுவதை தவிர்க்கும் வகையில் குறித்த பாலத்தின் பாதுகாப்புக் கம்பியை உடனடியாக புனரமைத்து தருமாறு பயணிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .