2025 ஜூன் 30, திங்கட்கிழமை

புதிய அதிபரை நியமிக்குமாறு கிராம மக்கள் கோரிக்கை

George   / 2016 மே 04 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

'மடு வலயக்கல்வி அலுவலகர் பிரிவுக்குட்பட்ட மன்னார் தேவன் பிட்டி பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளையும், பாடசாலையின் வளர்ச்சியினையும் திட்டமிட்டு பின்னடைய செய்யும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. உடனடியாக தற்போதைய அதிபரை மாற்றி புதிய அதிபர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கவும்' என தேவன் பிட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தேவன் பிட்டி கிராம மக்களின் கோரிக்கைக்கு அமைவாக வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி ஜீ.குணசீலன், செவ்வாய்க்கிழமை மாலை அக்கிராமத்துக்கு விஜயம் செய்தபோது மக்கள் இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.

' தற்போதைய அதிபரை உடனடியாக மாற்றி புதிய அதிபரை நியமிக்குமாறு  பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனினும் மடு வலயக்கல்விப்பணிப்பாளர் இது வரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.  அதிபரின் நடவடிக்கைகளினால் பாடசாலையின் வளர்ச்சியில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக 10 வருடங்களாக அதிபராக கடமையற்றி வருகின்றார். தற்போதைய காலத்தில் அவரின் செயற்பாடுகள் பாடசாலை வளர்ச்சிக்கும், மாணவர்களின் கல்விக்கும் இடையூறாக இருப்பதையும் கவனத்துக்கு கொண்டு வருகின்றோம்.

புதிய அதிபரை நியமிக்குமாறு கோரி மடு வலயக்கல்வி பணிமனையை, கிராம மக்கள் கடந்த மாதம் முற்றுகையிட்ட போது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மடு வலயக்கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார். ஆனால், இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதிபரின் தன்னிச்சையான செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றதுடன் மாணவர்கள் சிலர் தனிப்பட்ட முறையில் தண்டிக்கப்படுகின்றனர். சில மாணவர்கள் பாடசாலைக்குச் செல்ல அஞ்சுகின்றனர்.

எனவே, எமது கல்வி சமூகத்தின் கவலைக்கிடமான குறித்த நிலையினை கருத்தில் கொண்டு எமது பாடசாலையின் வளர்ச்சியில் அக்கரையும் கரிசனையும் கொண்டு தூர நோக்குடன் சிந்தித்து செயற்படும் தகுதியுடைய அதிபர் ஒருவரை உடனடியாக நியமித்து எமது கல்விசமூகத்தை கட்டியெழுப்ப உதவி செய்யுங்கள்'  என அந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X