2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பூநகரியில் குடிநீர் நெருக்கடி

Kogilavani   / 2017 பெப்ரவரி 23 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - பூநகரி பிரதேசத்தில் பல்வேறு பகுதியில் தொடர்ந்தும் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவி வருவதால்,குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

பூநகரி பிரதேசத்தில் உள்ள 19 கிராம அலுவலர் பிரிவுகளில் மீள்குடியேறியுள்ள ஏழாயிரத்து 335 குடும்பங்களில் 10 கிராம அலுவலர் பிரிவுகளில் வாழும் சுமார் 3,112 குடும்பங்களுக்கு வருடம் முழுவதும் குடிநீர் விநியோகிக்க வேண்டிய நிலமை காணப்படுகின்றது.

அத்துடன், ஒன்பது பாடசாலைகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இந்நிலையில் மறவன்குறிச்சி, கொல்லக்குறிச்சி, இராமலிங்கம் வீதி, பரமன்கிராய், கறுக்காய் தீவு, செட்டியகுறிச்சி, ஞானிமடம், சித்தங்கேணி, நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .