Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 மார்ச் 15 , மு.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், பிராந்திய செய்தியாளர்களுக்கு செய்தி சேகரிக்க, மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய அனுமதி மறுத்துள்ளார்.
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் திங்கட்கிழமை(14) மாலை 3.30 மணியளவில் ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், கே.கே.மஸ்தான் ஆகியோரின் இணைத்தலைமையில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட பிராந்திய செய்தியாளர்களுக்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவினால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைய, மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிராந்திய செய்தியாளர்கள் தமது பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
ஆரம்ப நிகழ்வுகள் இடம் பெற்றுக்கொண்டிருந்த போது, மன்னார் மாவட்ட அரசாய்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய, செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த செய்தியாளர்களை பார்த்து 'உங்களுடைய ஊடக செயற்பாடுகளை நிறுத்தி செல்லுமாறும், ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முடிவடைந்த பின் ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்படும்' என தெரிவித்தார்.
இதனால் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் என்ன முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன போன்ற விடயங்களை உரிய முறையில் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முடிவடைந்த நிலையில் அரசாங்க அதிபர் ஊடகவியலாளர்களை சந்தித்து எவ்வித கருத்துக்களையும் வழங்கவில்லை.
இந்த நிலையில், ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் செய்தியாளர்களின் செயற்பாடுகளுக்கு தடை விதித்தமை தெர்ர்பில் அமைச்சர் ரிஷாட் பதியூதினிடம் ஊடகவியாளாலர்கள் கேள்வி எழுப்பியபோது,
' எங்களுக்கும், இச்சம்பவத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேப்பிரியவிடமே இதைக் கேட்க வேண்டும்' எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
எனினும், மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எவ்வித முடிவுகளும் எட்டப்படாத நிலையில், வாய்த்தர்க்கத்திலேயே கூட்டம் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago