Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
George / 2017 மார்ச் 03 , மு.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார், உப்புக்குளம் தெற்கு கிராம அலுவலகர் பிரிவுக்குட்பட்ட மக்களின் குடியிருப்பு காணிகளை மீட்டுத்தருமாறு கோரி, தேசிய நீர் வழங்கல் நகர அபிவிருத்த அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அவரிடம் கொழும்பில் வைத்து நேரடியாக மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
மன்னார், உப்புக்குளம் சன சமூக நிலையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாபா பாரூக் ஆகியோர் நேற்று முந்தினம் நேரடியாக சென்று அவரிடம் குறித்த மகஜரை கையளித்துள்ளனர்.
குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “உப்புக்குளம் தெற்கு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கோந்தைப்பிட்டி அரச காணி 1980க்கு முன்னர் சுமார் 60 குடும்பங்கள் வசித்து வந்தன.
1983 தொடக்கம் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம் காரணமாக பல தடவைகள் உள்ளூர் இடம் பெயர்வை சந்தித்த இம்மக்கள் 1990ல் விடுதலை புலிகளால் முற்றாக வெளியேற்றப்பட்டனர்.
இப்பகுதியில் வசித்த மக்கள் மிகவும் வறுமையானவர்கள், இவர்களில் ஒரு சில கல் வீடுகள் தவிர மிகுதி அனைத்தும் ஓலை வீடுகளாகும்.
இவர்களின் இடம் பெயர்வுக்குப் பின், உயர் பாதுகாப்பு பிரதேசமாக இப்பகுதி அறிவிக்கப்பட்டு இம்மக்கள் உள்நுழைய பாதுகாப்பு தரப்பினர் அனுமதிக்கவில்லை.
1995ஆம் ஆண்டு தொடக்கம் உப்பக்குளம் மக்கள் மீள் குடியேற்றத்துக்காக வந்த போதும் இக்காணிகளில் குடியமர அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை. அரசாங்க காணியும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், 2009இல் யுத்தம் நிறைவடைந்தது. இப்பிரதேசம் மக்கள் குடியிருப்புக்காக காணிகள் பிரதேச செயலாளரால் 2005ஆம் ஆண்டு காணிக்கச்சேரி மூலம் வழங்கப்பட்டிருந்தது.
வழங்கப்பட்ட காணிகளில் மன்னார் கோட்டை பின்புறமாக அமைந்துள்ள இக்காணிகள் அனைத்தும் பிரதேச செயலாளரினால் நில அளவை செய்யப்பட்டு காணிகளுக்கு அனுமதிப்பத்திரம் 2012ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது.
இதில் கோட்டைக்கு அருகாமையில் 11 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட காணிகளில், ஒரு பள்ளி வாசலும் இந்திய வீட்டுத்திட்டம் ஏனைய திட்டங்கள் ஊடாக 03 வீடுகளும் சொந்த செலவில் கட்டப்பட்ட வீடுகள் என சுமார் 04 வீடுகள் உள்ளது.
மேலும், 02 தற்காலிக வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இருந்தும் தற்போது இக் காணிகள் தொல்பொருள் திணைக்களத்துக்கு உரிய இடம் என கூறப்பட்டு இக்காணிகளில் எந்த அபிவிருத்திகளும் மேற்கொள்ள வேண்டாம் என்று கூறுகின்றனர்.
இதனால், இப்பகுதியில் கட்டப்பட இருந்த வீட்டுத்திட்ட வீடுகள் தடுக்கப்பட்டு இம்மக்கள் நிர்க்கதியான நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான முறைப்பாடு 17.06.2013ஆம் ஆண்டு, மன்னார் பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இப்பகுதியில் வசிப்பவர்கள் மிகவும் வறுமைப்பட்டவர்கள். எனவே, இப்பிரச்சினையை உரியவர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய தீர்வை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago