2025 ஜூன் 25, புதன்கிழமை

மகாகவியின் நினைவு தினம் அனுஸ்டிப்பு

Sudharshini   / 2015 செப்டெம்பர் 12 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

மகாகவி பாரதியாரின் நினைவு தினம் நேற்று (11) குருமன்காடு சந்தியில் அமைந்துள்ள பாரதியார் சிலையடியில் தமிழ் மணி அகளங்கன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், தமிழ் மணி அகளங்கனின் 'செந்தமிழும் நாப்பழக்கம்' எனும் நூலும் வெளியிடப்பட்டது. பாரதியின் பெருமைகளை பறை சாற்றும் கவிதையினை குரும்பையூர் ஜங்கரன் வழங்கியிருந்தார்.

வட மாகாண சபை உறுப்பினர்  ஜி.ரி.லிங்கநாதன், முன்னாள் உப நகரபிதா  க.சந்திரகுலசிங்கம் (மோகன்), முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், வவுனியா சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன்,  தமிழ் விருட்சம் அமைப்பின் செயலாளர் மாணிக்கம் ஜெகன், போசகர் ரோய் ஜெயக்குமார். சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .