2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மன்னாரில் தொழிலாளர் தினப் பொதுக்கூட்டம்

Gavitha   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், பொது அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், மகளிர் அமைப்புக்கள் ஆகியவை ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள தொழிலாளர் தினத்துக்கான பொதுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டம் மே மாதம் 01ஆம் திகதி மன்னார் நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெறவுள்ள மாபெரும் பொதுக் கூட்டம், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம் பெறவுள்ளது.

இதன் போது சிறப்பு வருகையாளர்களின் எழுச்சியுரைகளும் கலை நிகழ்வுகளும் இடம் பெறவுள்ளது.

குறித்த நிகழ்வில் அனைவரையும் தொழிலுறவு உரிமையுடன் கலந்து கொள்ளுமாறு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X