2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மர்ம பொருள் இல்லை

George   / 2016 ஜனவரி 15 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதியில் உள்ள மன்னார் தோட்டக்காடு கிராம அலுவலகர் பிரிவுப்பகுதியில் காணப்பட்ட காட்டுப்பகுதியில் மர்மப்பொருள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், குறித்த அடையாளம் காணப்பட்ட பகுதி மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய நேற்று மாலை  தோண்டப்பட்ட போதும் எவ்வித பொருட்களும் மீட்கப்படவில்லை.

மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதியில் உள்ள மன்னார் தோட்டக்காடு கிராம அலுவலகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காணப்பட்ட கள்ளுத் தவரணைக்கு முன்பாக உள்ள ரயில் கடவைக்கு சற்று தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் பாரிய உடை மரங்களுக்கு கீழ் மர்மப்பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸாருக்கு தகவல்கள் வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மன்னார் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டதோடு, குறித்த இடத்தில் பாதுகாப்புக்களை பலப்படுத்தியதோடு குறித்த விடயம் தொடர்பாக மன்னார் பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில், குறித்த பகுதியை தோண்டுவதற்கான நடவடிக்கைளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வந்த நிலையில் வியாழக்கிழமை(14) மாலை 2.30 மணியளவில்   மன்னார் நீதவான் ஆசிர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் தோண்டப்பட்டது.

இதன் போது மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார், மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் இட்டன் பீரிஸ் உட்பட பொலிஸ் அதிகாரிகள் இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் சம்பவ இடத்துகுகு வருகை தந்த நிலையில், குறித்த பகுதியில் அடையாளம் காணப்பட்ட பகுதிகள் முழுமையாக தோண்டப்பட்டது.

எனினும், நீண்ட நேரமாக குறித்த பகுதி மன்னார் நீதவான் முன்னிலையில் தோண்டப்பட்ட போது உடைக்கப்பட்ட தேங்காய் துண்டுகள் இரண்டு மாத்திரமே குறித்த அகழ்வுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

எனினும், அதனை சூழ்ந்த பகுதிகளிலும் தொடர்ச்சியாக தோண்டப்பட்ட போது எவ்வித பொருட்களும் மீட்கப்படவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X