Freelancer / 2023 ஓகஸ்ட் 26 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பு.கஜிந்தன்
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பாலிநகர் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 04.00 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாற்றுவலுவுள்ள ஒருவரால் நிர்வகிக்கப்பட்டு வந்த வர்த்தக நிலையமே இவ்வாறு இனம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் குறித்த வர்த்தக நிலையத்தில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் முன்னெடுத்து இருந்த வேளை, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் மல்லாவி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். R
1 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
11 Apr 2026