2025 ஜூன் 30, திங்கட்கிழமை

முகமாலை பாடசாலைக்கு அடிக்கல் நாட்டிவைப்பு

George   / 2016 மே 06 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி முகமாலை றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலைக்கு நிரந்தர கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல், வியாழக்கிழமை (05) நாட்டப்பட்டது.

கிளிநொச்சி வலய கல்விப்பணிப்பாளர் க.முருகதாஸ், நிகழ்வில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார்.

கிளிநொச்சி றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை, யுத்தம் காரணமாக முற்றாக அழிவடைந்தது. 

2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னரும் இப்பகுதியில் அதிகளவாக காணப்பட்ட வெடிபொருட்கள் கண்ணிவெடிகள் காரணமாக பாடசாலையை உடனே ஆரம்பிக்க முடியவில்லை. 

எனினும், 2014ஆம் ஆண்டு கட்டடங்கள் எதுவுமின்றி பாடசாலை குறித்த இடத்தில் தற்காலிகமாக இயங்க ஆரம்பித்தது. தற்போது பாடசாலைக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், பளை கோட்ட கல்வி அதிகாரிகள், அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர் என பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X