Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2017 மார்ச் 20 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியா, ஓமந்தை, விளக்குவைத்தகுளம் பகுதியிலுள்ள வீடொன்றின் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள், இனந்தெரியாத நபர்களால், இன்று அதிகாலை 3 மணியளவில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
வீட்டின் முன்னால் மோட்டர் சைக்கிளை நிறுத்தி விட்டு, வீட்டு உரிமையாளர்கள் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, வீட்டு வளவுக்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்கள், வாழைத்தோட்டத்தில் வைத்து மோட்டர் சைக்கிளைத் தீ வைத்து எரியுட்டியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், அயல் வீட்டார் ஏதோ ஒரு பொருள் எரிவதை அவதானித்து கூக்குரல் இட்டபோது, மோட்டர் சைக்கிள் எரிந்துகொண்டிருந்துள்ளது.
இது தொடர்பில் ஓமந்தைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த அவர்கள், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago