2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மாந்தை கிழக்கு வீதியை உடனடியாக புனரமைக்க வேண்டும்

George   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்துக்கான பிரதான வீதியினை உடனடியாக புனரமைக்க வேண்டும் என மாவட்ட செயலர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின் தங்கிய பகுதிகளில் ஒன்றாக காணப்படும் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்கான பிரதான வீதியாக காணப்படும் 17.5 கிலோமீற்றர் நீளமான வீதி கடந்த 30 வருடங்களுக்;கும் மேலாக புனரமைக்;கப்படாமல் காணப்படுகின்றது.

நீர்ப்;பாசனத் திணைக்களம், மாந்தை கிழக்கு பிரதேச சபை, மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்களம் ஆகியவற்றுக்கு சொந்தமான வீதிகளாக இவை காணப்படுகின்றன.

இவ்வாறு காணப்படும் நிலையில், இவ்வீதியை புனரமைப்பதற்கு எந்தவிதமான நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இதனையடுத்து, முல்லைத்தீவு மாவட்ட செயலர் குறித்த பிரதான வீதியினை புனரமைப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X