Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Princiya Dixci / 2015 செப்டெம்பர் 14 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டு தற்போது குடும்பங்களுடன் சேர்ந்து வாழும் முன்னாள் போராளிகள், மீண்டும் புலனாய்வுத்துறையினரின் விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகவும் இதனால் முன்னாள் போராளிகள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் விசனம் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 'யுத்தத்தின் பின் இலங்கை அரசிடம் சரணடைந்த மற்றும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் புலி போராளிகள், புனர்வாழ்வு நிலையங்களில் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில், விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் குடும்பங்களுடன் இணைந்து வாழ்ந்து வரும் நிலையில் அண்மைக்காலமாக திடீர் என மறைமுகமான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில் ஆட்சி மாற்றத்தின் பின் விசாரணைகள், மற்றும் அச்சுறுத்தல்கள் குறைவடைந்த நிலையில் காணப்பட்டன.
ஆனால், தற்போது மீண்டும் முன்னாள் போராளிகள் புலனாய்வுத்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டுள்ளனர்.
இதனால், அவர்களும் அவர்களுடைய குடும்பங்களும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். உடனடியாக குறித்த விசாரணையை தடுத்து நிறுத்துமாறு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளேன்.
குறித்த கடிதத்தில் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அவர்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு அச்சுறுத்துகின்ற இந்நிலமை இல்லாதொழிக்கப்பட வேண்டும். மீண்டும் அவர்கள் புலனாய்வுத் துறையினரினால் விசாரணைக்குட்படுத்தப்படுகின்ற சந்தர்ப்பங்கள் மாற்றப்பட வேண்டும்.
அவர்கள் நிம்மதியான வாழ வழியமைக்க வேண்டும். எனவே, உடனடியாக புலனாய்வுத்துறையினரின் விசாரணைகளை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளேன்' என அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
49 minute ago
1 hours ago
2 hours ago