Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Niroshini / 2017 ஜனவரி 29 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் சௌத்பார் கிராமத்தில் இருந்து மீன் பிடிப்பதற்காக சென்ற தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மன்னார் - சௌத்பார் கிராமத்தைச் சேர்ந்த மீனவரான ஜெஸ்மன் (வயது-49), மற்றும் அவரது இளைய மகனான ஜெ.ஜெக்ஸ்சன் (வயது-9) ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த நபர் தனது மகளை அழைத்துக்கொண்டு சனிக்கிழமை இரவு 7 மணியளவில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றுள்ளார்.
மீன்பிடிக்கச் சென்ற இருவரும் அன்றைய தினம் இரவு வீடு திரும்பாத நிலையில், உயிரிழந்தவரின் மூத்த மகன் நேற்று காலை கடற்கரைக்குச் சென்று பார்த்துள்ளார்.
இதன்போது தனது தந்தை மற்றும் சகோதரன் ஆகிய இருவரும் மீன் பிடிக்கச் சென்ற படகு கடலில் மூழ்கிய நிலையில் கிடப்பதை கண்டு அயலவர்களிடம் குறித்த சம்பவத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
இது குறித்து மன்னார் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், கடற்படையினர் மற்றும் கிராம மீனவர்களுடன் இணைந்து கடலில் தேடுதல்கள் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இதன்போது, இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.
சடலம் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago