2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மீன்பிடி சங்கத்தின் பொதுநோக்கு மண்டபம் திறந்து வைப்பு

Niroshini   / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு முத்தையன்கட்டு நன்னீர் மீன்பிடி சங்கத்தின் பொதுநோக்கு மண்டபத்தை வட மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் செவ்வாய்க்கிழமை (26) திறந்து வைத்தார்.

நன்னீர் மீன்பிடியாளர்களை வாழ்வாதாரத்தில் உயர்த்தும் நோக்கோடு, குறித்தொதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நன்கொடையின் 2.5 மில்லியன் ரூபாய் செலவில் இம் மண்டபம் அமைக்கப்பட்டது.

நிகழ்வில், வடமாகாண மீன்பிடி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் இ.சுரேந்திரனாதன், வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் டி.சிவராஜலிங்கம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட வீதி அபிவிருத்தித் திணைக்கள பிரதம பொறியியலாளர் எஸ்.ஜெகானந்தன் மற்றும்  கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், முத்துஐயன்கட்டு  குளத்தையொட்டிய நன்னீர் மீன்பிடி சங்கங்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X