2025 ஜூன் 30, திங்கட்கிழமை

முன்மாதிரியாக செயற்பட்டவர் நீதவான் எம்.ஐ.வகாப்தீன்

Sudharshini   / 2015 டிசெம்பர் 29 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

யுத்தத்தின் பின் அபிவிருத்தியடைந்து வரும் கிளிநொச்சியின் அபிவிருத்தியை சீர்குலைக்கும் வகையில் இடம்பெற்றுவந்த சமூகவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முன்மாதிரியாக செயற்பட்டவர் நீதவான் எம்.ஐ.வகாப்தீன் என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் செவ்வாய்க்கிழமை (29) தெரிவித்தார்.

கிளிநொச்சி நீதிமன்றத்தில் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் செல்லும் நீதவான் எம்.ஐ.வகாப்தீனின் பியாவிடை நிகழ்வு, செவ்வாய்க்கிழமை (29) கிளிநொச்சி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் அவர்; தெரிவிக்கையில், 'முன்னர் கட்டுக்கோப்பாக வாழ்ந்த இச்சமூகத்தில் யுத்தத்தின் பின்னர், சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரிக்க தொடங்கி விட்டன.

இதனை கட்டுப்படுத்துவதற்கு முன்மாதிரியாக செயற்பட்டவர் நீதவான் எம்.ஐ.வகாப்தீன். இவரால் வழங்கப்பட்ட பல தீர்ப்புகளுக்கு மேன்முறையீடுகள் செய்யப்பட்டது. அதனால், தற்போது சமூகவிரோத செயற்பாடுகள் குறைவடைந்துள்ளது என தெரிவித்தார்.

யுத்தத்தின் பின்னர் 2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் 01ஆம் திகதி கிளிநொச்சி நீதிமன்ற செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டபோது, அன்றிலிருந்து 2012ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதிவரை கிளிநொச்சி நீதிமன்ற நீதவானாக, பெ.சிவகுமார் கடமையாற்றினார்.

பின்னர், 2010ஆம் ஆண்டு செப்டெம்பர் 03ஆம் திகதி முதல் கிளிநொச்சி நீதிமன்ற நீதவானாக கடமையாற்றிய நீதவான் எம்.ஐ.வகாப்தீன்,  2015ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி இடமாற்றம் பெற்றுள்ளார்.

இந்நிகழ்வில், சிரேஷ்ட சட்டத்தரணிகள், நீதமன்ற உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X