Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Princiya Dixci / 2015 செப்டெம்பர் 11 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
மூன்றாம் தவணைக்காக பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும் கிளிநொச்சி முருகானந்தாக்கல்லூரியில் போதிய வகுப்பறை தொகுதிகள் இன்மையால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தின் முதல் நிலைக்கல்லூரிகளில் ஒன்றாகக் காணப்படுகின்ற கிளிநொச்சி முருகானந்தாக்கல்லூரியில் தற்போது 600 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
இந்நிலையில் போதிய வகுப்பறைத்தொகுதிகள் இன்றி மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக ஒரு தொகுதி வகுப்புக்கள் தற்காலிக ஓலைக் கொட்டகை ஒன்றிலே கடந்த ஐந்து வருடங்களாக இயங்கி வருகின்றன.
தற்போது கொட்டகை மிக மோசமாக சேதமடைந்து ஆபத்;தான முறையில் காணப்படுவதுடன், மழை பெய்வதாக இருந்தால் அதில் எந்த வகுப்புக்களும் நடத்த முடியாத நிலை ஏற்படும். ஆகவே, குறித்த தற்காலிக கொட்டகையை புனரமைத்து தருமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago