2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

முறையற்ற நெற்பயிற்செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு சலுகைகள் இரத்து

George   / 2017 ஏப்ரல் 22 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

மாவட்ட விவவசாயக்குழுக்கூட்டம் மற்றும் இரணைமடு சிறுபோக பயிற்செய்கைககூட்டம் என்பன நேற்று காலை கிளிநொச்சி   மாவட்ட செயலகத்தில், அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றன.

இதன்போது, இரணைமடுக்குளத்தின் கீழ் 800 ஏக்கரில்  பயிர்ச்செய்கை மேற்கொள்ளலாம் என தீர்மானிக்கப்பட்டதுடன் முறையற்ற விதத்தில் கிணற்று நீரையோ அல்லது குளத்து நீரையோ பயன்படுத்தி நெற்பயிற்செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு அரசினால் வழங்கப்படும்  சலுகைகள் இரத்து செய்யப்படும்  என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரசாங்க அதிபர் சத்திய சீலன், கிளிநொச்சி  பிராந்திய பிரதி  நீா்ப்பாசன பணிப்பாளா்  எந்திரி சுதாகரன்,  திணைக்களங்களின் அதிகாரிகள், விவசாயிகள் ஆகியோா் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .