2025 ஜூன் 30, திங்கட்கிழமை

முல்லைத்தீவுக்கு 30 விவசாயக் கிணறுகள் வேண்டும்

Menaka Mookandi   / 2016 ஜனவரி 19 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாய நடவடிக்கைகளை விரிவாக்கம் செய்வதற்கு 30 விவசாயக் கிணறுகள் அமைத்துக் கொடுக்க வேண்டிய தேவையுள்ளதாக மாவட்ட விவசாயத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட பின்னர், முல்லைத்தீவு பல்வேறு தேவைகள் இனங்காணப்பட்டு, அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மூலம் நிவர்த்தி செய்யப்பட்டன. விவசாய நடவடிக்கையை மேம்படுத்தவும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அந்தவகையில், விவசாய நடவடிக்கையை விருத்தி செய்ய 2016ஆம் ஆண்டு 30 பொதுக் கிணறுகள் அமைக்க வேண்டும் என அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X