2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ரூ. 8 இலட்சம் போலி நாணயத்தாள்கள் மீட்பு

Niroshini   / 2021 மே 04 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி - சாந்தபுரம் கிராமத்தில், நேற்று (03) மாலை 5 மணியளவில், 8 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கிடைக்கப்பெற்ற தகவலொன்றையடுத்து, சாந்தபுரம் கிராமத்தில் உள்ள வீடொன்றை சோதனையிடப்பட்ட கிளிநொச்சி பொலிஸார், பெருந்தொகையான ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களை மீட்டுள்ளனர்.

இதில், 8 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் போலிஸ நாணயத்தாள்கள் இருந்ததாகத் தெரிவித்த பொலிஸார், இதன்போது சந்தேகத்தின் பேரில், சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதாகவும் கூறினர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X